கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் சாலை பேரணியில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்க செய்ததாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை ஜூன் மாதத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
தமிழகத்தில், மக்களவைத் தேர்தலை ஒட்டி, கடந்த மார்ச் 19 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் சாலைப் பேரணி நடத்தப்பட்டது. இதில், பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கச் செய்ததாக, கோவை தனியார் பள்ளி மீதும், தலைமை ஆசிரியர் மீதும் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் அதன் தாளாளர்கள் வேணுகோபால், நிர்மல்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுக்களில், பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில், 22 மாணவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற்றே, அவர்களை பேரணிக்கு அழைத்துச் சென்றதாகவும், மாணவர்கள் யாரையும் நிர்பந்திக்கவில்லை எனவும், மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் பழிவாங்கும் நோக்கில், பள்ளி நிர்வாகத்தை துன்புறுத்தும் நோக்கத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
இதையும் வாசிக்கலாமே...
“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!
வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!
தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!
தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!இதையும் வாசிக்கலாமே...
“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!
வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!