கோடாக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும் கடன் அட்டைகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் 5-வது மிகப் பெரிய தனியார் வங்கியாக கோடாக் மஹிந்திரா வங்கி உள்ளது. இந்நிறுவனம் ஆன்லைன் மூலமாக புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கும் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் வங்கிக்கு நேரில் செல்லாமல் ஆன்லைனில் ஆவணங்களை பதிவேற்றி புதிய வங்கிக் கணக்கை துவங்கிக் கொள்ள முடியும்.
இதே முறையில் கிரெடிட் கார்டுகளையும் அந்த வங்கி வழங்கி வருகிறது. இந்த நிலையில், இவ்வாறு வழங்கப்படும் வங்கி பரிவர்த்தனைகளில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆய்வு நடத்தி வந்தது. இந்த நிலையில், ஆன்லைன் மூலம் புதிய வங்கி கணக்குகளை தொடங்குவதையும் கிரெடிட் கார்டுகள் வழங்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு கோடாக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
எனினும் அந்த வங்கியில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் பிற செயல்பாடுகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இதனால் வராது. புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பது மற்றும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கு மட்டும் இந்த தடை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இது அந்த வங்கி வாடிக்கையாளர் களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!
வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!