டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை, மத்திய அரசின் உத்தரவின் பேரில் திகார் சிறையில் சித்திரவதை செய்வதாக, ஆம் ஆத்மி எம்பி- சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால், கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது முதல்வர் கேஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் கைது செய்யப்பட்டு, உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஆம் ஆத்மி கட்சி எம்பி-சஞ்சய் சிங், சிறையிலிருந்து விடுதலையானார்.
இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவின் பேரில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், திகார் சிறையில் சித்திரவதை செய்யப்படுவதாக எம்பி-சஞ்சய் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “பெரும்பான்மையுடன், 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லியின் 2 கோடி மக்களின் முதலமைச்சரான அர்விந்த் கேஜ்ரிவால், இந்திய அரசின் உத்தரவின் பேரில், நாட்டு பிரதமரின் உத்தரவின் பேரில் சித்திரவதை செய்யப்படுகிறார்.
அவரது மன உறுதியை குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவருடைய உரிமைகள், வசதிகள் மறுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் வெளிப்படையாகவே செய்யப்படுகின்றன. சிறைக் கையேட்டின்படி மற்றும் சிறை விதிகள் 602, 605-ன் கீழ் யார் வேண்டுமானாலும் சிறையில் நேருக்கு நேர் சந்திக்கலாம்.
ஆனால், கேஜ்ரிவாலின் மனைவி, நோய்வாய்ப்பட்ட அவரது பெற்றோர் சிறையில் அவரைச் சந்திக்க வந்தபோது, நேருக்கு நேர் சந்திக்க முடியாது என கூறியுள்ளனர். பயங்கரமான குற்றவாளிகள் கூட சிறையில் சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால் 3 முறை முதல்வராக இருந்தவர், தனது மனைவியை ஜன்னல் வழியாகவே சந்திக்க அனுமதிக்கப்படுகிறார். அதுவும் இடையில் கண்ணாடி உள்ளது” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
‘தலித் அரசியல் ரஜினிக்கு தெரியுமா?’ ரசிகர்கள் ஆவேசம்!
‘வேண்டாம்... கைவிடுங்க...’ ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!
மீனவர்களில் வங்கிக் கணக்கில் ரூ.5,000... தடைக்காலம் தொடங்கும் நிலையில் நிவாரணம்!
திருமண நாளைக் கொண்டாடி விட்டு, நள்ளிரவில் தூக்கில் தொங்கிய 6 மாத கர்ப்பிணி!
சர்ச்சை வீடியோ: ஹெல்மெட் போடலை... நம்பர் பிளேட் கிடையாது... ராதிகாவுடன் பைக்கில் பறந்த சரத்குமார்!