திருமண நாளைக் கொண்டாடி விட்டு, நள்ளிரவில் தூக்கில் தொங்கிய 6 மாத கர்ப்பிணி!

உயிரிழந்த பவானி
உயிரிழந்த பவானி

அரியலூர் அருகே நேற்று திருமண நாளை கொண்டாடிய 6 மாத கர்ப்பிணி நள்ளிரவில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழமாதேவி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். ஓட்டுநரான இவரும், ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த பவானி என்பவரும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், இருகுடும்பத்தினரும் இருவரையும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது பவானி 6 மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.

தா.பளூர் காவல் நிலையம்
தா.பளூர் காவல் நிலையம்

கடந்த மாதம் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த பவானியை, கணவர் சக்திவேல் நேற்று வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். அவர்களுக்கு திருமண நாள் என்பதால் வீட்டில் இருந்து அழைத்து வந்து, இருவரும் தங்களது வீட்டில் திருமண நாளை கொண்டாடியதாக தெரிகிறது. இந்நிலையில் இருவருக்கும் இடையே நேற்றிரவு திருமண நாள் கொண்டாட்டங்களை முடித்த பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. அதன் பின்னர், வீட்டில் இருந்து சக்திவேல் வெளியே கிளம்பிய நிலையில், தனியாக இருந்த பவானி திடீரென சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு வந்த சக்திவேல் மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை

பவானியின் தந்தை ரங்கநாதன் இது தொடர்பாக தா.பளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பவானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, கொலையா? தற்கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி இரண்டு வருடங்களே ஆன நிலையில் இது குறித்து உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் வாசிக்கலாமே...   


+2க்கு பிறகு என்ன படிக்கலாம்? வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்... ஸ்காலர்ஷிப் விவரங்கள்!

ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்... பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!

"தம்பி அண்ணாமலை... பார்த்து நடந்துக்க... ஆணவ திமிரில் இப்படி பேசாதப்பா..." பகிங்கிரமாக எச்சரித்த பழனிசாமி!

தடுப்புகளைத் தாண்டி  இனிப்புக் கடைக்குச் சென்ற ராகுல்... ஸ்டாலினுக்கு வழங்கி அன்புப் பரிமாற்றம்!

தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்களின் டார்கெட்... கரூரை கைப்பற்றப் போவது யாரு? கள நிலவரம் இதுதான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in