உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 70க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம், அம்பேத்கர் நகர் பகுதியில் திருமண விழா இன்று நடைபெற்றது. அந்த திருமண விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்களுக்கு பல்வேறு உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த உணவை சாப்பிட்ட பல பேர், சில மணிநேரத்தில் வாந்தி எடுத்தனர். சிலர் மயக்கம்போட்டு கீழே விழுந்தனர். இதனால் திருமண மண்டமே பதற்றம் அடைந்தது. இதையடுத்து வாந்தி, மயக்கம் போட்டு விழுந்த 70-க்கும் மேற்பட்டோரை, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு, இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ”திருமண விழாவில் எடுத்துக் கொண்ட உணவு ஒத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைவரும் உயிருக்கு எந்த ஆபத்தின்றி நலமுடன் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர். திருமணம் போன்ற சுப காரியம் நடந்த விழாவில், 70க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் அடைந்த சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!
வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!