இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ரத்னம்’ படம் வருகிற 26-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை புரமோட் செய்வதற்காக தேர்தல் பிரச்சார பாணியில் களத்தில் இறங்கியுள்ளார் ஹரி.
'தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களுக்குப் பிறகு நடிகர் விஷால்- ஹரி கூட்டணி ‘ரத்னம்’ படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் திருச்சி, புதுச்சேரி என ஒவ்வொரு ஊராக தீவிரமாக புரமோஷன் பணிகளில் இறங்கியுள்ளார் இயக்குநர் ஹரி.
குறிப்பாக, நேற்று புதுச்சேரியில் மார்க்கெட், மக்கள் கூடும் இடங்கள் என நடந்து சென்று அங்கிருந்த மக்களிடம் ”விஷால் நடித்திருக்கும் ‘ரத்னம்’ படம் ஏப்ரல் 26 அன்று வெளியாகிறது. நான்தான் அந்தப் படத்தை இயக்கி இருக்கிறேன். தியேட்டர் சென்று படம் பாருங்கள்” என்று சொன்னார் ஹரி.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், ’இது என்னடா ஹரி படத்துக்கு வந்த சோதனை’ என்றும் ’என்ன எலெக்ஷன் மாதிரி இப்படி ஆரம்பிச்சிட்டீங்க’ என்றும் கேலி செய்து வருகின்றனர்.
ஒரு சில இடங்களில் தியேட்டரிலும் ரசிகர்களை சந்தித்த இயக்குநர் ஹரி, “நல்ல படங்கள் எந்த காலத்திலும் ஓடும் என ரசிகர்கள் நீங்கள் நிரூபித்து வருகின்றனர். ‘ரத்னம்’ படத்தை ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்து எடுத்திருக்கிறோம். நிச்சயம் நீங்கள் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.
முதல் முறையாக யோகிபாபு இதில் முரடனாக நடித்திருக்கிறார். அவரே கோபக்காரர் என்றால் விஷால் எந்த அளவுக்கு அடிப்பார் என்று யோசியுங்கள். சமூகத்தில் நடக்கும் தப்பைத் தட்டிக் கேட்கும் ஹீரோவாக இந்தப் படத்தில் விஷால் நடித்திருக்கிறார்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!
வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!