தோனிக்கு கொடுக்கும் அதே அன்பை எனக்கும் கொடுக்கிறீர்கள்... சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் உருக்கம்!

ருதுராஜ்
ருதுராஜ்

மகேந்திர சிங் தோனிக்கு கொடுக்கும் அதே அன்பை ரசிகர்கள் எனக்கும் கொடுப்பது நெகிழ்ச்சியாக இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தமிழ்நாட்டுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஈர்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், சிஎஸ்கே அணியையும், தல தோனியையும் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த நபராகவே தோனியை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி துவங்குவதற்கு முதல் நாள், சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். தோனி போல அவரால் சாதனைகளை படைத்திட முடியுமா என்று கேள்விகள் எழுந்தன.

தோனி ருதுராஜ்
தோனி ருதுராஜ்

இந்நிலையில், இதுவரையில் ஐபிஎல் தொடரில் நடந்த 5 ஆட்டங்களில் 3 வெற்றிகள், 2 தோல்விகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றுள்ளது. கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால், பேட்டிங்கில் சொற்ப ரன்களையே எடுத்து வந்தார் ருதுராஜ் கெய்க்வாட். 4 போட்டிகளில் அரைசதம், சதம் எதுவும் அடிக்காமல் வெறும் 88 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். கேப்டன் பதவி தரும் அழுத்தம், நெருக்கடி அவரின் பேட்டிங்கை பாதித்துவிட்டது என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதை தனது பேட்டால் விளாசிக்கிறார் ருதுராஜ். நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், 58 பந்துகளில் 67 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் மீண்டும் பார்முக்கு வந்தார் ருதுராஜ்.

ருதுராஜ்
ருதுராஜ்

இந்நிலையில், தோனி குறித்தும், அணியின் வெற்றி குறித்தும் பேசிய ருதுராஜ், " எனது முதல் ஐபிஎல் அரைசதம், போட்டியை முடிக்க மஹி பாய் என்னுடன் இருந்தார். என்னுடையது மெதுவான ஆரம்பம் என்று நான் சொல்லமாட்டேன், டி20களில் ஒன்று அல்லது இரண்டு பந்துகளை அடித்து நொறுக்குவது சில சமயங்களில் இருக்கும். சில சமயங்களில் விளையாடுவதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. சிஎஸ்கே அணிக்கு நான் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து சிஎஸ்கே ரசிகர்கள் கொடுக்கும் அன்பை நினைத்து நெகிழ்வாக உள்ளது. எனக்கு இந்த அனுபவம் மிகவும் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு முறை டாஸ்போடும்போது மஹி பாய்க்கு கொடுத்த அதே அன்பை எனக்கும் கொடுக்கிறீர்கள். சேப்பாக்கம் எனும் சிஎஸ்கேவின் கோட்டை இன்னும் சத்தமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...   


முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கவலைக்கிடம்... மருத்துவமனையில் அனுமதி!

பகீர்... துப்பாக்கியுடன் முதல்வர் அருகே சென்று, மாலை அணிவித்த நபரால் பரபரப்பு!

நடிகர் அஜித்தின் காஸ்ட்லி கிஃப்ட்... ஆச்சரியத்தில் வில்லன் நடிகர்!

தேர்தல் திருவிழா.. பணம், நகை, மது, சேலை, லேப்டாப்... ரூ.71 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!

அமீருக்கு அடுத்தடுத்து சிக்கல்... நேரில் ஆஜராக மீண்டும் சம்மன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in