பானை சின்னம் கிடைக்குமா?... இன்னும் அவகாசம் இருக்கிறது என்கிறார் திருமாவளவன்!

செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்
செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்

தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக செயல்பட்டு வருகிறது. பாரதிய ஜனதாவை எதிர்த்து அரசியல் செய்கின்ற கட்சிகளுக்கு தனிச் சின்னம், பொதுச் சின்னம் ஒதுக்குவதற்கு மறுப்பு தெரிவிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

காட்டுமன்னார்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,” தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படவில்லை ஒரு சார்பாக செயல்பட்டு வருகிறது. பாரதிய ஜனதாவை எதிர்த்து அரசியல் செய்கின்ற கட்சிகளுக்கு தனிச் சின்னம், பொதுச் சின்னம் ஒதுக்குவதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லுகின்ற காரணம் ஏற்புடையதாக இல்லை. பாரதிய ஜனதாவை ஆதரிக்கின்ற கட்சிகளுக்கு சில நிமிடங்களில் சின்னங்களை ஒதுக்குகின்றார்கள்.

மிக வெளிப்படையாக ஆளுகின்ற பாரதிய ஜனதாவிற்கு தேர்தல் ஆணையம் ஆதரவாக செயல்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் போட்டியிடுகின்ற அனைத்து தொகுதிகளிலும் பொதுச் சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தோம். மனு கொடுத்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. கடந்த 21ஆம் தேதியிட்ட கடிதம் கடந்த 25ஆம் தேதி எங்களுக்கு கிடைத்தது. அதில் அவர்கள் சொல்லி இருக்கின்ற காரணம் கடந்த தேர்தலில் நீங்கள் ஒரு சதவீத வாக்குகள் பெறாததால், உங்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் அது உண்மை இல்லை. கடந்த 2019 நான் போட்டியிட்ட பானை சின்னத்தில் 1.5% வாக்குகள் பெற்றுள்ளேன். தங்களது வழக்கறிஞர்கள் இது தொடர்பாக வாதிட்டுள்ளார்கள்.

விசிக பானை சின்னம்
விசிக பானை சின்னம்

பானை சின்னத்தைக் கேட்டு இந்திய அளவில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. யாருக்கும் ஒதுக்கவில்லை. இது தொடர்பாக திறந்தவெளி நீதிமன்றத்திலேயே நீதியரசர் எதற்காக சின்னத்தை நீங்கள் ஒதுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதன் பிறகு மாலை 5 மணிக்குள் இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும் என வழிகாடுதலையும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் 5 மணி அளவில் அவர்கள் மீண்டும் அதே காரணத்தை சுட்டிக்காட்டி கணக்கு வழக்கு ஒப்படைத்த ஆவணங்களில் நோட்டரி பப்ளிக் கையெழுத்து போடவில்லை என தெரிவித்துள்ளார்கள். மற்றபடி குறிப்பிட்டு சொல்லக்கூடிய காரணங்கள் எதுவும் இல்லை.

வேண்டும் என்றே மறுதலிக்கின்ற காரணத்தோடு தென்னிந்திய அளவில் போட்டிடுகின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த போக்கு வன்மையாக கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக எங்களது வழக்கறிஞர்கள் நாளை மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்பதை வாதிட இருக்கிறார்கள்.”என்றார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் திருமாவளவன்
வேட்புமனு தாக்கல் செய்யும் திருமாவளவன்

பானை சின்னம் கிடைக்கவில்லை என்றால் வேறு எந்த சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு என்ற கேள்விக்கு, பதிலளித்த அவர், “தென்னிந்திய மாநிலங்களில் இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் உள்ளது. எனவே தெலுங்கானா மற்றும் கர்நாடகா விசிக சார்பில் மீண்டும் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஏற்கனவே நான்கு எம்எல்ஏக்களை பெற்றுள்ள கட்சி பானை சின்னத்தில் நின்று ஒரு எம் பி யும் பெற்றுள்ள கட்சி. எனவே சிதம்பரம், விழுப்புரத்தில் பானை சின்னம் வழங்க முன்னுரிமை உள்ளது. தேர்தல் அலுவலர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு முன்னுரிமை வழங்க வாய்ப்புள்ளது. பொறுத்திருங்கள் கால அவகாசம் இன்னும் உள்ளது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...  

இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in