மலையகத் தமிழர் விழாவில் பங்கேற்க அனுமதிக்கவில்லை: மத்திய அரசு மீது அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு!

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

மலையகத் தமிழர் விழாவில் பங்கேற்க இலங்கை செல்ல இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதிக்கவில்லை என்று தமிழ்நாடு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.

மலையகத் தமிழர் விழா
மலையகத் தமிழர் விழா

இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்குச் சென்று 200 ஆண்டுகள் ஆனதை நினைவுபடுத்தும் வகையிலும், அவர்கள் இலங்கைக்கு அளித்த சேவையையும் பொருளாதார பங்களிப்பையும் பாராட்டி 'நாம் 200' என்ற தேசிய நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமானால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி உரையை ஒளிபரப்ப இந்திய அரசு தடை விதித்துள்ளதாக செய்தி வெளியானது.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், "இலங்கையில் மலையகத் தமிழர் விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் நான் பங்கேற்க இருந்தேன். அதாவது, மலையகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பதிலாக நான் பங்கேற்க இருந்தேன். மத்திய அரசு அனுமதி கொடுக்காததால் எனது பயண ஏற்பாட்டை ரத்து செய்துவிட்டேன்.

மத்திய அரசிடம் இருந்து அனுமதி முந்தைய நாள் இரவு வரை கிடைக்கவில்லை. நவம்பர் 2-ம் தேதி விழாவுக்கு நவம்பர் 1-ம் தேதி இரவு 9.30 மணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

என்னுடைய பயணத்தை ரத்து செய்த நிலையில், மத்திய அரசிடம் அனுமதி கிடைத்தது. மத்திய அரசு அனுமதி வழங்க தாமதித்ததால் இலங்கைப் பயணத்தை ரத்து செய்வதாக விழா ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்து விட்டேன்.

இலங்கையில் உள்ள விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டு கொண்டதன் பேரில் வாழ்த்து செய்தி அனுப்பினார் முதலமைச்சர். ஆனால், முதலமைச்சர் வாழ்த்து செய்தி ஒளிபரப்ப செய்யாததற்கு என்ன காரணம் என தெரியவில்லை. நவ.2-ம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் முதல்வரின் வாழ்த்து செய்தியும் அனுப்பு வைக்கப்பட்டது. எந்த காரணத்தாலோ முதல்வரின் வாழ்த்து செய்தி மலையகத் தமிழர் விழாவில் ஒளிபரப்படவில்லை.

இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை புறக்கணிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in