சென்னை தியாகராய நகரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ள வாகனப் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை தி.நகரில் பிரதமர் மோடி இன்று வாகனப்பேரணி மேற்கொண்டுள்ளார். தியாகராய நகரில் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனப் பேரணி நடைபெறவுள்ளது.
பிரதமர் மோடியுடன் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை, தென் சென்னை வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், வட சென்னை வேட்பாளர் பால் கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் வாகனத்தில் உடன் உள்ளனர்.
சாலையில் இருபுறங்களிலும் தொண்டர்கள், பொதுமக்கள் சூழ்ந்து பூக்களைத் தூவி பிரதமர் மோடிக்கு வரவேற்பளித்தனர். பிரதமர் மோடி கையில் தாமரை சின்னத்துடன் மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.
பிரதமர் மோடியின் வாகன பேரணி செல்லும் பகுதி முழுவதையும் காவல்துறை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். வாகனப் பேரணி நிகழ்ச்சி நடைபெறும் தியாகராயநகா் பகுதி, பிரதமா் தங்கும் கிண்டி ஆளுநா் மாளிகை ஆகிய பகுதிகளில் ஐந்தடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை பார்த்த பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கவலைக்கிடம்... மருத்துவமனையில் அனுமதி!
பகீர்... துப்பாக்கியுடன் முதல்வர் அருகே சென்று, மாலை அணிவித்த நபரால் பரபரப்பு!
நடிகர் அஜித்தின் காஸ்ட்லி கிஃப்ட்... ஆச்சரியத்தில் வில்லன் நடிகர்!
தேர்தல் திருவிழா.. பணம், நகை, மது, சேலை, லேப்டாப்... ரூ.71 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!
அமீருக்கு அடுத்தடுத்து சிக்கல்... நேரில் ஆஜராக மீண்டும் சம்மன்