‘தமிழக, கேரள அரசுகள் தீவிரவாதிகளை ஊக்குவிக்கின்றன’ அமைச்சர் எல்.முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு

அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு

தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் செயலை கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகள் செய்து வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக அரசில் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. ஜவுளித்துறை நலிவடையும் சூழலுக்கு திமுக கொண்டு வந்த மின் கட்டண உயர்வே காரணம். வீடுகளுக்கும் 3 மடங்கு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர்.

ஜவுளித்துறை வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். வேங்கைவயல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து இருந்திருந்தால் இன்று நெல்லையில் வன்கொடுமை நடந்து இருக்காது. பொருளாதாரம் ஏற்றத்தாழ்வால், ஒரே சமுதாயத்தை சார்ந்தவர்களையும் வெட்டி கொல்கிறார்கள். யாருக்கும் பாதுகாப்பு இல்லை” என்றார்.

கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி
கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், ”பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 1000-க்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்களை நீக்கப்பட்டு உள்ளன. தொழில் துறையினருக்கு ஆதரவான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாஜகவினர் மீது வழக்குகள் போட்டாலும் இன்னும் வேகமாக வேலை செய்வார்கள். அனுப்பும் கோப்புகளை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போடுவது ஆளுநர் வேலை இல்லை.

ஆளுநர் எல்லாவற்றிலும் கையெழுத்திட்டுவிட்டால் இவர்களுக்கு அவர் நல்லவர் ஆகிவிடுவார். ஆளுநர் அலுவலகம் முன்பு பெட்ரோல் குண்டு வீசியவர்களின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும். ஆளுநரை மிரட்டும் வகையில் எல்லாம் வேலை செய்தால் எடுபடாது.” எனக் கூறினார்.

அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு

மேலும், “குறைந்த விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். மத்திய பிரதேசத்தில் மின் கட்டணம் எல்லாம் குறைவு. தொழில்துறையை ஊக்குவிக்க தவறுகிறது தமிழ்நாடு அரசு. மத்திய அரசு கொடுக்க வேண்டியவற்றை முறையாக கொடுத்து வருகின்றனர்.

தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் செயலை கேரளா அரசும், தமிழ்நாடு அரசும் செய்கிறது. ஆளுநர்களை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு உள்ளது. ஆளுநரை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ளதை வைத்து மிரட்டி எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆளுநருக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளது. அவற்றை அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்” என தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!

பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!

கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!

பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?

ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in