மக்களின் கவனத்திற்கு... இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!

மக்களின் கவனத்திற்கு... இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!

ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வருகிற 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, உணவு, உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பெரும்பாலான வணிக சாலைகளில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை அடுத்த ஞாயிற்றுக்கிழமை வருவதால், முந்தைய ஞாயிற்றுக்கிழமையான இன்று ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் இயங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இன்று ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என ரேஷன் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி, அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ள வசதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்று ரேஷனில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in