அதிர்ச்சி... நம்பி வந்த மாணவி; நண்பருடன் சேர்ந்து காதலன் செய்த கொடுமை

வன்கொடுமை - harassment
வன்கொடுமை - harassment

கர்நாடகாவில் பி.யூ.சி படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 2 இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

உடுப்பி மாவட்டம் கார்கலா டவுன் நெஞ்சூர் போப்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பி.யூ.சி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி செல்லும் போது அதே பகுதியைச் சேர்ந்த சுஜித் பூஜாரியிடம் நட்பாக பேசி வந்துள்ளார். இதையடுத்து இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்தனர்.

அந்த மாணவியை சுஜித் உடுப்பி, கார்கலா உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும், வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் மாணவி வீட்டிற்கு அடிக்கடி சுஜித் சென்று தனிமையில் இருந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி கல்லூரிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சுஜித், அவரை உடுப்பிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அங்கே இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதையடுத்து மாணவியை சுஜித் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அப்போது அங்கு சுஜித்தின் நண்பர் அபிநந்தன் வந்தார். அவரும் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் மாணவியிடம் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என 2 பேரும் கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இதனால் சிறுமி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தபோது, அவர் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி பெற்றோரிடம் கதறி அழுதாள். இதனைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கார்கலா டவுன் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கார்கலா டவுனில் பதுங்கி இருந்த சுஜித், அபிநந்தன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். நம்பி சென்ற காதலியை, காதலனே மோசம் செய்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in