காதல் விவகாரத்தால் பயங்கரம்... 2 தங்கைகளின் தலையைத் துண்டித்துக் கொன்ற அக்கா!

மண்வெட்டி
மண்வெட்டி

வீட்டில் பெற்றோர் இல்லாத போது, காதலுடன் நெருக்கமாக இருந்ததைப் பார்த்த தனது இரண்டு தங்கைகளையும் மண்வெட்டியால் தாக்கி தலையைத் துண்டித்து அவர்களது சகோதரியே படுகொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம்
குற்றம்

உத்தரப்பிரதேச மாநிலம், பல்ராய் காவல் நிலையத்திற்குட்பட்ட பகதூர்பூர் கிராமத்தில் ஒரு வீட்டில் சுர்பி(6), ரோஷ்னி(4) ஆகிய சகோதரிகளின் உடல்கள் சிதைந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது இரண்டு உடல்களும் வெவ்வெறு அறைகளில் கிடந்தன.

இதையடுத்து அந்த சிறுமிகளின் சகோதரி அஞ்சலி(20) என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தனது 2 தங்கைகளைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

கைது
கைது

அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது தனது பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு காதலனை அஞ்சலி அழைத்து வந்துள்ளார். அத்துடன் அவர்கள் நெருக்கமாக இருந்துள்ளனர். இதை தனது தங்கைகள் இருவரும் பெற்றோரிடம் சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தில் மண்வெட்டியால் தாக்கி, அவர்களின் தலையைத் துண்டித்து அஞ்சலி கொலை செய்தது தெரிய வந்தது. அத்துடன் கொலைக்கான தடத்தையும் அவர் அழிக்க முயன்றுள்ளார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் இன்று கூறுகையில், " தனது 2 தங்கைகளையும் அஞ்சலி வெட்டிக் கொன்ற மண்வெட்டி, அவரின் ரத்தக்கறை படிந்த ஆடைகளை பறிமுதல் செய்துள்ளோம். இந்த இரட்டைக் கொலையில் வேறு ஒரு நபருக்கும் தொடர்பிருக்கும் என சந்தேகப்படுகிறோம்" என்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய் பட தயாரிப்பாளரின் தந்தை காலமானார்... திரையுலகினர் அஞ்சலி!

உஷார்... பிரபல ஹோட்டல் சிக்கன் பிரியாணியில் புழு... வாடிக்கையாளர் அதிர்ச்சி!

தங்கப்பதக்கங்களைக் குவித்த முன்னாள் வலுதூக்கும் வீராங்கனை மரணம்!

துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் வாங்கி மகனை காப்பாற்றிய பெற்றோர்!

தண்ணீர் திறப்பு நிறுத்தம்... கருகியது விவசாயிகளின் கனவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in