சிக்கன் பிரியாணியா... புழு பிரியாணியா?- அதிர்ந்து போன வாடிக்கையாளர்

புழு பிரியாணி
புழு பிரியாணி

ஆசைப்பட்டு சாப்பிட வாங்கிய பிரியாணியில் புழு கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்திருக்கிறது.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பிரபலமான பிரியாணி கடை ஒன்று இருக்கிறது. இந்த கடையில் பட்டினம்காத்தான் ஊரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மூன்று பிரியாணி பார்சல் வாங்கி இருக்கிறார். இதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்ற அவர், சாப்பிட முயன்றபோது பிரியாணியில் புழு கிடந்திருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது செல்போனில் படம் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

பிரியாணி கடையில் அதிகாரிகள் ஆய்வு
பிரியாணி கடையில் அதிகாரிகள் ஆய்வு

அதில், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பிரியாணி கடையில் 3 பார்சல் வாங்கியதாகவும் அந்த பிரியாணியில் இரண்டு புழுக்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிகளிடம் அவர் புகார் அளித்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பிரியாணி கடையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த பிரியாணி மற்றும் உணவுப்பொருள்களை அவர்கள் ஆய்வு செய்தனர். இதை எடுத்து வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் அந்த கடைக்கு நோட்டீஸ் வழங்கிச்சென்றனர்.

சாப்பிட வாங்கிய பிரியாணியில் புழு கிடந்த சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in