
ஈரோட்டில் சோறு போடமால் அடித்து துன்புறுத்தி சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக மகன் மற்றும் மருமகள் மீது மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், திருநகர் காலனியைச் சேர்ந்தவர் திலகவதி. இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது இரு மகன்கள் மற்றும் அவர்களது குடும்பத்துடன் சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இரு மகன்களும் தாயை சரிவர கவனிக்காததால் ஆத்திரமடைந்த திலகவதி, இருவரையும் வீட்டை காலிசெய்ய அறிவுறுத்தியதோடு, வாடகைக்குவிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்த திட்டமிட்டுள்ளார்.
ஆனால் இரண்டாவது மகன் செந்தில், வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாததால் திலகவதி, மூத்த மகன் கார்த்திக் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது திலகவதி வசித்த வீட்டின் கதவில் மேலும் ஒரு பூட்டு போடப்பட்டு இருந்துள்ளது. இது குறித்து மகன் செந்திலிடம் கேட்டதற்கு “இனி இந்த வீடு என்னுடையது. அங்கிருந்து வெளியேறிவிடுங்க” என கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து வயதான காலத்தில் திலகவதி செல்ல இடமின்றி தவித்துள்ளார். இதனால், தான் இருந்த வீட்டை இளைய மகன் செந்தில் மற்றும் அவருடைய மனைவி சரண்யா ஆகியோர் அபகரிக்க முயற்சி செய்கின்றனர் என்று கருங்கல்பாளையம் காவல் நிலையம் மற்றும் ஆட்சியர் குறைதீர்ப்பு கூட்டத்தில் திலகவதி புகார் அளித்துள்ளார்.
ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது தங்க வீடில்லாமல் உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் திலகவதி தங்கி வருகிறார். இந்த நிலையில் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டுத் தரும்படி கண்ணீர் மல்க அவர் கோரிக்கை வைத்தது, பார்ப்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!
ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!
அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!
சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!