
ஜம்முகாஷ்மீரில் நெடுஞ்சாலையில் கிடந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டை பறிமுதல் செய்துள்ள பாதுகாப்பு படையினர், அப்பகுதியில் பாதுகாப்பை அதிகரித்துள்ளதோடு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்முவின் நக்ரோடா பகுதியில் உள்ள சித்ரா நார்வால் தேசிய நெடுஞ்சாலையில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மோப்பநாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது, சாலையில் கிடந்த மர்மப் பொருள், மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் வகையை சேர்ந்த டிபன் பாக்ஸ் என்பதும், சுமார் 2 கிலோ எடை இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த குண்டை செயலிழக்கச் செய்த வெடிகுண்டு நிபுணர்கள், அதனை பத்திரமாக அகற்றினர்.
இதனிடையே, இந்த வெடிகுண்டை சாலையில் வீசிச்சென்றது யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நெடுஞ்சாலையை சேதப்படுத்தும் நோக்கில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டதா அல்லது வேறு சதிச்செயல் காரணமா என்ற கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!
பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!
கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!
பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?
ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!