
பீகாரின் பக்ஸாரில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று காலை கெளஹாத்தி வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பெண்கள் உட்பட 6 பேர் பலியாகினர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் உயிரிழந்த 4 பேரில் இரண்டு பேர் தாய், மகள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், உயிரிழந்த ஆண் யார் என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த விபத்திற்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சம்பவத்தன்று காலை 9.40 மணியளவில் 128 கிலோ மீட்டர் வேகத்தில் வந்ததாகவும், திடீரென ரயில் ஓட்டுநர் பிரேக் பிடித்ததில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வந்துள்ளது.
இதில் ரயில் முழுவதும் கவிழ்ந்த நிலையில், இரண்டு குளிர்சாதனப் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில், அதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து ஏற்பட்ட போது அருகே உள்ள கிராமத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் வந்து ரயிலில் சிக்கியிருந்தவர்களை மீட்க உதவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!
பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை
க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!
மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது