அசாமில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியானதோடு, 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அசாமின் உடல்குரி மாவட்டத்தில் டின்சுக்கியாவிலிருந்து திமாகுட்சி நோக்கி கார் ஒன்றில் 6 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். சைக்கியா சுபுரி என்ற பகுதியின் அருகே வந்த போது, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த கார், எதிரில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்தவர்களில், லாரி ஓட்டுனர் மற்றும் காரில் பயணித்த 3 பேர் என 4 பேரை அருகில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த போலீஸார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!
பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!
கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!
பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?
ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!