
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதற்கு விளக்கம் கேட்டு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியத்திற்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பண்டிகை தினங்களிலோ அல்லது பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனாலோ ரசிகர்களுக்காக அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுவதை திரையரங்குகள் கடைபிடித்து வந்தன. அரசின் அனுமதியோடு இந்த 4 மணிகாட்சிகள் திரையிடப்பட்டு வந்தன. ஆனால் கடந்த ஜனவரி மாதம் அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு ஆகிய திரைப்படங்கள் பொங்கலுக்கு ஒன்றாக ரிலீஸ் ஆனபோது ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டு பிரச்சினை வெடித்தது.
இந்த கொண்டாட்டத்தின் போது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து சிறப்பு காட்சிகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கேட்டும் தமிழக அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீபாவளி விருந்தாக தமிழில் ஜப்பான், ஜிகர்தண்டா ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனதுபோல், இந்தியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த டைகர் 3 படமும் வெளியானது. இப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படத்தை திருப்பூரில் உள்ள சக்தி சினிமாஸ் என்கிற திரையரங்கம், அதிகாலை 7 மணி காட்சி திரையிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அதற்காக ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் நடைபெற்ற ஸ்கிரீன் ஷாட்டுகளும் வைரலாக பரவின.
இதுகுறித்து விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!
காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!
உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!
அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!