அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!

கார்கோடு விபத்து
கார்கோடு விபத்து

காசர்கோடில் முதியவர் ஒருவர் அறியாமல் தன் சொந்த பேரனை கார் ஏற்றிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், காசர்கோடில் கடந்த 10-ம் தேதி வீட்டின் வெளியே 5 வயது மதிக்கத்தக்க சிறுவனும், 2 வயது நிரம்பிய சிறுவனும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த குழந்தைகளின் தாத்தா காரில் வீட்டிற்குள் வந்துள்ளார்.

அதனைப் பார்த்த 5 வயது சிறுவன் கார் நிறுத்த வசதியாக தனது சைக்கிளை ஓரமாக நிறுத்தினான். அப்போது, 2 வயது குழந்தை காரின் முன்னால் போய் நின்றுள்ளது. இதனை அறியாத முதியவர் காரை முன்னாள் எடுக்க முயற்சிக்க. குழந்தை காரின் முன் சக்கரத்தில் மாட்டி நசுங்கியது.

இதனைக் கண்ட 5 வயது சிறுவன் அலறியபடி ஓட, முதியவரும் காரில் இருந்து இறங்கி ஓடி வந்தார். அங்கு குழந்தை மூச்சு, பேச்சற்று இருந்துள்ளது. உடனடியாக குழந்தையை மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது பேரக்குழந்தையை தாத்தாவே தவறுதலாக கார் ஏற்றிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in