பொறுத்தது போதும்... பாகுபலி - தேவசேனையை சேர்த்து வைத்த ரசிகர்கள்!

பொறுத்தது போதும்... பாகுபலி - தேவசேனையை சேர்த்து வைத்த ரசிகர்கள்!

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் AI தொழில் நுட்பத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்காவை இணைத்து ரசிகர்கள் சில படங்களை வெளியிட்டுள்ளனர். அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமா உலகில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஆகியோர் குறித்து ஆண்டுக் கணக்கில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும் விரைவில் திருமணம் முடித்துக் கொள்வார்கள் என்றும் அவ்வப்போது தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டன.

இருவரும் பாகுபலி 1, பாகுபலி 2 படத்தில் நடித்திருந்தபோது திருமணம் குறித்து சுவாரசியமான செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இருப்பினும், பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஆகியோர் இன்னும் சிங்கிளாகவே இருக்கின்றனர். இருவருக்கும் இடையே நட்பை தாண்டி எந்த உறவும் கிடையாது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பிரபாஸ் மற்றும் அனுஷ்காவின் திருமணம் மற்றும் குழந்தை குறித்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளிவந்துள்ளன. இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று பொறுமை காத்த ரசிகர்கள், தற்போது அவர்களே எல்லாம் செய்து வைத்து ஆர்டிபிஷியல் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்கள்.

ஒரு தரப்பினர் இந்த புகைப்படங்கள் பிரமாதமாக இருக்கிறது என்று கமென்ட் செய்தாலும் இன்னொரு தரப்பினர், ரசிகர்கள் எல்லை மீறி பர்சனல் விஷயங்களில் தலையிட்டுள்ளனர் என்று விமர்சித்துள்ளார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய் பட தயாரிப்பாளரின் தந்தை காலமானார்... திரையுலகினர் அஞ்சலி!

உஷார்... பிரபல ஹோட்டல் சிக்கன் பிரியாணியில் புழு... வாடிக்கையாளர் அதிர்ச்சி!

தங்கப்பதக்கங்களைக் குவித்த முன்னாள் வலுதூக்கும் வீராங்கனை மரணம்!

துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் வாங்கி மகனை காப்பாற்றிய பெற்றோர்!

தண்ணீர் திறப்பு நிறுத்தம்... கருகியது விவசாயிகளின் கனவு!


Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in