பிரதமருக்கு பேட் பரிசளித்த இந்திய அணி 
விளையாட்டு

பிரதமர் மோடிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்திய கிரிக்கெட் அணி!

காமதேனு

சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்த 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா முதல் முறையாக 28 தங்கம் உட்பட 107 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், பதக்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு வீரர்களுடன் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினரும் கலந்துகொண்டனர். அப்போது, ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்துகொண்ட இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட், அணி வீரர்கள் இணைந்து கையெழுத்திட்ட பேட்டும், ஜெர்சியையும் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார்.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

SCROLL FOR NEXT