நாளை விண்ணில் பாய்கிறது 'ககன்யான்' சோதனை விண்கலன்... தொடங்கியது கவுண்டவுன்!

ககன்யான் விண்கலம்
ககன்யான் விண்கலம்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை நாளை காலை 7.30 முதல் 9 மணிக்குள் நடைபெறவுள்ளது. இதற்கான கவுண்டவுன் தற்போது தொடங்கியுள்ளது.

ககன்யான் விண்கலம்
ககன்யான் விண்கலம்

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. அந்த வரிசையில் இந்தியாவும் தனது தடத்தைப் பதிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அதற்காக, கடந்த 2007-ம் ஆண்டு ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு ககன்யான் என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டன.

ககன்யான் விண்கலம்
ககன்யான் விண்கலம்

பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை அனுப்பி, 2 அல்லது 3 நாட்கள் ஆய்வுப் பணி மேற்கொண்டு பிறகு அவர்களை பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதே ககன்யான் திட்டத்தின் நோக்கமாகும். வரும் 2024-ம் ஆண்டு இத்திட்டத்தை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயார் நிலையில் ககன்யான் விண்கலம்
தாயார் நிலையில் ககன்யான் விண்கலம்

இந்நிலையில், ககன்யான் விண்கலத்தின் புகைப்படங்களை இஸ்ரோ அண்மையில் வெளியிட்டது. ஆந்திர பிரதேசம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி மையத்திலிருந்து நாளை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் ககன்யான் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக இஸ்ரோ அண்மையில் அறிவித்தது. ககன்யான் திட்டத்தின் வெற்றிக்கு பிறகு, 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in