செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை
Updated on
2 min read

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நாளை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக வெளுத்து வாங்கி வருகிறது. கேரள கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்றும் நாளையும் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுத் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’வானிலை அறிக்கையின்படி நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ள காரணத்தால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவரின் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் 25.11.2023 அன்று செயல்படாது. எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in