
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த 3 முறை கிடைத்த வாய்ப்பை திமுக கெடுத்து விட்டது என பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் பாமக சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ” சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 3 முறை கிடைத்த வாய்ப்பை திமுக கெடுத்து விட்டது.
சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுகவுக்கு மனம் இல்லை. சமூக நீதியே எங்கள் மூச்சு என்று பேசும் திமுக, இது குறித்து மூச்சே விடவில்லை என கடுமையாக விமர்சித்தார்.
மேலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த காக்கா கல்லேல்கர் ஆணையத்தின் அறிக்கையை, 1953-ல் அன்றைய பிரதமர் நேரு குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து விட்டதாகவும் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
பாமக தலைவர் அன்புமணி பேசும்போது, மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் மறுப்பதாகவும், தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எப்படி எழுப்புவது என கடுமையாக விமர்சித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில், கல்வீச்சு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்... ரூ.20 கோடி கேட்டு பரபரப்பு!
பிக் பாஸ் வீட்ல இந்த கூத்தெல்லாம் நடக்குது... உண்மையை போட்டுடைத்த முன்னாள் போட்டியாளர்!