இந்தியாவின் பிரதமராக காங்கிரஸின் ’இளவரசர்’ வரவேண்டுமென பாகிஸ்தான் விரும்புவதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.
காங்கிரஸ் மீதான தாக்குதலை இன்றைய தினம் புதிய கோணத்தில் முடுக்கிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, ’காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும், ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வேண்டும் என்றும் பாகிஸ்தான் விரும்புவதாக’ தெரிவித்துள்ளார்.
குஜராத் தேர்தல் பிரச்சார களத்தில் மையம் கொண்டிருக்கும் பிரதமர் மோடி இன்றைய தினம் ஆனந்த் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த சா ஃபவாத் ஹுசைன் என்பவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வீடியோவை எக்ஸ் தளத்தில் புகழ்ந்து பகிர்ந்ததை குறிப்பிட்டார். இந்த வகையில் காங்கிரஸ் - பாகிஸ்தான் என தனது 2 எதிரிகளையும் இன்று ஒருசேர மோடி சாடியுள்ளார்.
”காங்கிரஸ் இங்கு இறந்து கொண்டிருப்பதால் அங்கே பாகிஸ்தான் அழுகிறது. பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள், அவர்கள் அடுத்த பிரதமராக காங்கிரஸின் இளவரசர் (ராகுல் காந்தி) வர வேண்டும் என்கிறார்கள். இந்த வெளிப்பாடு பாகிஸ்தானுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான கூட்டுறவை அம்பலப்படுத்துகிறது. நாட்டின் எதிரிகள் பலவீனமான இந்திய அரசையே விரும்புகிறார்கள், வலிமையான அரசை அல்ல என்பதும் தெளிவாகிறது”
“பாகிஸ்தான் மற்றும் காங்கிரஸுக்கு இடையிலான கூட்டு இப்போது முழுமையாக அம்பலமாகியுள்ளது. நம் நாட்டின் எதிரிகள் இந்தியாவில் ஒரு பலவீனமான அரசாங்கத்தை விரும்புகிறார்கள்; வலிமையான அரசை அல்ல. 2014-க்கு முன் இருந்த ஊழல் ஆட்சியையே அவர்கள் விரும்புகிறார்கள்” என்று ஆனந்த் நகர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?
நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!
காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!
கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!