வேட்பாளரை அறிவித்தது மதிமுக... திருச்சியில் துரை வைகோ போட்டி!

துரை வைகோ
துரை வைகோ

திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று நடைபெற்றது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த முறை திருச்சி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வைகோ தன் மகன் துரை வைகோவுடன்...
வைகோ தன் மகன் துரை வைகோவுடன்...

இதையடுத்து மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆட்சி மன்றக்குழு கூட்டம் கூடி ஆலோசனை நடத்தியது. இதையடுத்து திருச்சி மதிமுக வேட்பாளராக கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளரை அறிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “இந்தத் தேர்தலில் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட முயன்று வருவதாக தெரிவித்தார். தனித்தன்மையை பாதுகாக்கவே தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பம்பரம் சின்னம்
பம்பரம் சின்னம்

கட்சியினர் உணர்ச்சிமயமாக இருக்கிறார்கள். மதிமுக வேட்பாளராக களமிறங்கும் துரை வைகோவை திமுக வெற்றி பெறச்செய்யும் என நம்புகிறோம். பிற தொகுதிகளில் மதிமுக தொண்டர்கள் திமுக வெற்றிக்குப் பாடுபடுவார்கள்”என்றும் வைகோ தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

“இரட்டை இலை எனக்கே கிடைக்கணும் முருகா'!... திருச்செந்தூரில் ஓபிஎஸ் மனமுருகி பிரார்த்தனை!

'குக் வித் கோமாளி' பாலா செய்த தரமான சம்பவம்... வைரலாகும் வீடியோ!

1 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு எப்போது? பள்ளிக் கல்வித்துறை முடிவு!

விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்... காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு!

நீரை சேமிக்கும் புதுமையான டெக்னிக்... வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in