பட்டியலின மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தும் காங்கிரஸ்; சந்திரசேகர் ராவ் கடும் தாக்கு!

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

பட்டியலின மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்துவதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வனப்பர்த்தி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டு பேசினார்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்

அவர் பேசும்போது, ”விவசாயிகள் நலனில் பாஜகவை போலவே காங்கிரஸ் கட்சிக்கும் அக்கறை இல்லை. இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின மக்களின் நலன்களுக்காக மத்திய பாஜக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அவர்களுக்காக குரல் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி சொல்லிக் கொள்கிறது.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

ஆனால், சுதந்திரத்திற்கு பிறகு மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. இருந்தபோதிலும் பட்டியலின மக்களின் நலனுக்காகவோ, இஸ்லாமிய மக்களின் நலனுக்காகவோ எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. பட்டியலின மற்றும் இஸ்லாமிய மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வருகிறது ” என்று குற்றம் சாட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in