தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு... கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை!

தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு... கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை!

ஏப்ரல் 19 ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு  ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏழாம் கட்ட வாக்குப்பதிவு  ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்துடன் சேர்ந்து ஆந்திரா, அருணாச்சல், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலும், 12 மாநிலங்களில் 25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கும் நாள் முதல் கடைசி கட்டத் தேர்தல் முடிவடையும் ஜூன் 1-ம் தேதி மாலை 6.30 மணி வரை வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

அதேபோல், தேர்தல் பிரசாரம் ஓய்ந்தபிறகு எந்த கருத்துக்கணிப்பு முடிவுகளையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  தேர்தல் நடைபெறும்போது கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டால் அது மற்ற இடங்களில் தேர்தலில் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் எப்போதும் இது போன்ற தடைகள் விதிக்கப்படுவது வழக்கம் தான்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!

நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!

கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... தேர்ச்சக்கரத்தில் சிக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!

46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in