நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!

ஈரானிய மீன் பிடிக்கப்பல்
ஈரானிய மீன் பிடிக்கப்பல்

அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பலை இந்திய கடற்படை அதிரடியாக விரைந்து  மீட்டுள்ளது.

இந்திய கடற்படை
இந்திய கடற்படை

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்களை ஹமாஸ் தீவிரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், சரக்கு கப்பல்களை கடத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி கடற்கொள்ளையர்களும் கப்பல்களைக் கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்ந்து வரும் நிலையில் இந்திய கடற்படையினர் அந்தப் பகுதியில் தற்போது முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வழியாக வரும் கப்பல்கள் மீது தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீதும், கடத்தல் காரர்கள் மீதும் இந்திய கடற்படையினர் தகுந்த பதிலடி கொடுத்து கடத்தப்படும் கப்பல்களை மீட்டு வருகின்றனர்.

இந்திய கடற்படை
இந்திய கடற்படை

இந்நிலையில், அரபிக்கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் ஈரானைச் சேர்ந்தவர்கள் மீன்பிடி கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் பாகிஸ்தான் நாட்டவர்களை சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்கள் நேற்று   சகொட்ரா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலை வளைத்துப் பிடித்தனர்.  ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்கள் 9 பேர் கொண்ட அந்த கும்பல் ஈரான் மீன்பிடிக் கப்பலில் ஏறி அதைக் கடத்த முயன்றனர். 

அதையடுத்து அந்த கப்பலில் இருந்து அவசர உதவி கோரி அவசர அழைப்பு அனுப்பப்பட்டது.  அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் இந்த தகவலை பெற்றன. அதையடுத்து அவசர அழைப்பு வந்த கப்பலை நோக்கி  மீட்பு பணிக்காக விரைந்தன. சுமார் 12 மணிநேர தீவிர முயற்சிக்குப்பின் இந்திய கடற்படையிடம் கொள்ளையர்கள் அனைவரும் சரணடைந்தனர்.மீன்பிடி கப்பலில் இருந்த 23 பாகிஸ்தானியர்கள், ஈரானிய  மாலுமிகள் என அனைவரையும்  இந்திய கடற்படையினர் பாதுகாப்பாக  மீட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in