கேரளாவில் பரபரப்பு... 6 வயது மகளைப் பலாத்காரம் செய்த தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை!

கேரளாவில் பரபரப்பு...  6 வயது மகளைப் பலாத்காரம் செய்த தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை!

தனது 6 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 3 ஆயுள் தண்டனையை விதித்து திருவனந்தபுரம் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 40 வயதுடையவரின் மனைவி வளைகுடா நாடு ஒன்றில் பணியாற்றி வருகிறார். இதனால் அவரது 6 வயது மகள், தந்தையின் கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில், அந்த சிறுமியின் அந்தரங்க உறுப்பில் காயம் இருப்பதை, அவரது பாட்டி கண்டறிந்தார். இது தொடர்பாக சிறுமியிடம் விசாரித்த போது தனது தந்தை தன்னைப் பலாத்காரம் செய்ததாக அந்த குழந்தை சொன்னது.

இதுதொடர்பாக விசாரித்த போது, கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையை மருத்துவமனையில் அவரது பாட்டி சேர்த்தார். அப்போது அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தை பாலியல் பலமுறை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குடிபோதையில் தனது மகளிடம் அவரது தந்தை பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டார் என்று சிறுமியின் மூத்த சகோதரி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். இந்த நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

திருவனந்தபுரம் நீதிமன்றம்
திருவனந்தபுரம் நீதிமன்றம்

குழந்தையை ஒன்றுக்கு மேற்பட்ட முறை துஷ்பிரயோகம் செய்தல், 12 வயதுக்குட்பட்ட குழந்தையை துஷ்பிரயோகம் செய்தல், குழந்தையைப் பாதுகாக்க வேண்டிய தந்தையே துஷ்பிரயோகம் செய்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் சிறுமியின் தந்தைக்கு மூன்று ஆயுள்தண்டனையும், 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கின் விசாரணை மார்ச் 29, 2024 அன்று தொடங்கி ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அரசுத் தரப்பில் 17 சாட்சிகள் மற்றும் 19 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மாவட்ட சட்டசேவை ஆணையத்தால் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரள மாநிலம், மலப்புரம் பகுதியில் திருக்குரான், அரபி மொழியைப் பயிற்றுவிக்கும் மதரஸா பள்ளிக்கூடம் உள்ளது. இதன் ஆசிரியர் தனது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் 3 ஆயுள் தண்டனை விதித்து மஞ்சேரி விரைவு நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in