பரபரப்பு... தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்: கடிதம் எழுதி வைத்து விட்டுக் காணாமல் போன எஸ்.ஐ!

எஸ்.ஐ ஷாஜி பால்
எஸ்.ஐ ஷாஜி பால்

எர்ணாகுளம் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு எஸ்.ஐ காணாமல் போனச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் கொத்தமங்கலம் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தின் எஸ்.ஐயாக பணியாற்றுபவர் ஷாஜி பால். பைங்கோட்டுரைச் சேர்ந்த ஷாஜி பால், வேலைக்காக கொத்தமங்கலம் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் பணிக்குச் சென்றார்.

கொத்தமங்கலம் காவல் நிலைய
கொத்தமங்கலம் காவல் நிலைய

ஆனால், அவர் நேற்று வரை வீடு திரும்பவில்லை. அத்துடன் அவர் எங்கு போனார் என்ற தகவல் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ஷாஜி பாலின் மனைவி, தன் கணவரைக் காணவில்லை என்று பொத்தானிகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொத்தானிகாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு ஷாஜி பால் வீட்டை விட்டுச் சென்றது தெரிய வந்தது.

எஸ்.ஐ ஷாஜி பால்
எஸ்.ஐ ஷாஜி பால்

இதன் காரணமாக எஸ்.ஐ ஷாஜி பால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தலைமறைவாகினாரா என்று பொத்தானிகாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து காணாமல் போன எஸ்.ஐ ஷாஜியை பல்வேறு மாவட்டங்களில் தேட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், எஸ்.ஐ ஷாஜி பாலை மூணாறில் போலீஸார் இன்று கண்டுபிடித்தனர். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் எர்ணாகுளம் மாவட்ட காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...
உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in