கோப்புப்படம்
கோப்புப்படம்

உள்நாட்டு விமானத்தில் தங்க கட்டிகளை எடுத்து செல்லலாமா?! 497 கிராம் தங்க கட்டி பறிமுதல்; உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் உரிமையாளர் மனு மீது ஒரு மாதத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த சையத் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ள மனுவில்,'கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் 497 கிராம் தங்கத்தை எடுத்து வந்தபோது சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து, தங்க கட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரில் நகைகள் செய்யும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இல்லாததால் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தங்கத்தை கொண்டு வரும் போது அதிகாரிகள் பிடித்தனர். சுங்க பொருட்கள் சட்டத்தின் படி வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கொண்டு வந்தால் மட்டுமே பறிமுதல் செய்ய சட்டம் அனுமதிக்கிறது. உள்நாட்டில் தங்கத்தை எடுத்து வர சட்டம் அனுமதி வழங்குகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

மனைவி மற்றும் தாயின் 709 கிராம் பழைய நகைகளை கொடுத்து, ஜிஎஸ்டி செலுத்தி வாங்கிய தங்கம் என ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதை அதிகாரிகள் கேட்கவில்லை. விமானத்தில் தங்கத்தைக் கொண்டுச் செல்வது தடை செய்யப்படவில்லை. வணிகரீதியான பயன்பாட்டிற்காகவும் தங்கம் எடுத்து வரவில்லை என்பதால் கைபற்றப்பட்ட தங்கத்தை விடுவிக்க உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.கே.ஜெயராஜ், "கைப்பற்றப்பட்ட தங்கத்திற்கான அசல் ஆவணங்களை அதிகாரிகள் வழங்கவில்லை. தங்கம் கைபற்றப்பட்டால் அபராதம் மட்டுமே விதிக்க சட்டம் அனுமதித்தும் அதிகாரிகள் அதை மீறியுள்ளனர். அதனால் தங்கத்தை விடுவிக்க உத்தரவிட வேண்டும்" என தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, "மனுதாரரின் கோரிக்கை மீது ஒரு மாதத்தில் விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு... பிரகாஷ் ராஜ், ராகுல் டிராவிட் ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்

கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?

13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in