தீபாவளிக்கு இன்னும் 11 நாட்களே... சிவகாசியில் ரூ.700 கோடி பட்டாசுகள் தேக்கம்... உற்பத்தியாளர்கள் கவலை!

பட்டாசுகள்
பட்டாசுகள்

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே மீதமுள்ள நிலையில் சிவகாசியில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளதால் உற்பத்தியாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

பட்டாசுகள்
பட்டாசுகள்

தீபாவளிக்கு இன்னும் 11 தினங்களே  இருப்பதால் புத்தாடை, பட்டாசு விற்பனைகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. முக்கிய வணிக வீதிகளில் விடுமுறை தினங்களிலும், மாலை நேரங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் சிவகாசியில் பட்டாசுகள் அதிக அளவில் தேங்கியிருப்பதாக உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள், நாடு முழுவதும் சுமார் 90 சதவீத பட்டாசு தேவையைப் பூர்த்தி செய்கின்றன. இங்கு பட்டாசு உற்பத்தி தொழிலில் நேரடியாக 3 லட்சம் பேரும், மறைமுகமாக 5 லட்சம் பேரும் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக வடமாநிலங்களில் தீபாவளிக்கு இரு மாதங்களுக்கு முன்பே பட்டாசு தேவையை வியாபாரிகள் முன்பதிவு செய்துவிடுவார்கள்.

ஆனால், இந்த ஆண்டு தீபாவளி முன்பதிவு தொடங்கி, ஒரு மாதத்திற்கு மேலாகியும் வடமாநில ஆர்டர்கள் எதுவும் வரவில்லை என்கின்றனர் பட்டாசு அதிபர்கள். 

குறிப்பாக தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஆலைகளில் பெருமளவு பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளன. டெல்லியைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் பட்டாசு ஆலை விபத்தை அடுத்து விற்பனை உரிமம் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவுக்கு அனுப்ப வேண்டிய பட்டாசுகளை மற்ற மாநிலங்களுக்கு குறைந்த விலைக்கு அனுப்பும் நிலை உருவாகி உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை, கர்நாடகாவில் விற்பனை உரிமம் வழங்க மறுப்பது உட்பட பல காரணங்களால் சிவகாசியில் கடந்த ஆண்டை காட்டிலும் 20 சதவீத விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

பட்டாசுகள்
பட்டாசுகள்

அதாவது 700 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளன. ஏற்கெனவே பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது, சரவெடி உற்பத்தி கூடாது என பல நீதிமன்ற கட்டுப்பாடுகள் . அத்துடன் இதுவும் சேர்ந்து பட்டாசு தொழில் நலிவடைந்து வருவதாகவும், மாநில அரசுகளாவது தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் பட்டாசு உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!

பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ

டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

குட்நியூஸ்... இன்று முதல் மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in