‘ஒரே நாடு ஒரே பாடத்திட்டம்’ சாத்தியமா? உச்ச நீதிமன்ற வழக்கில் சிபிஎஸ்இ விளக்கம்!

பள்ளி குழந்தைகள்
பள்ளி குழந்தைகள்

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பள்ளிப் பாடத்திட்டம் மற்றும் கல்வி வாரியத்தை அமல்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனுவுக்கு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் என்பதை வலியுறுத்தி அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு சார்பில் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

"உள்ளூர் சூழல், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில், இந்தியா முழுவதும் உள்ள ஒரே மாதிரியான கல்வி வாரியம் மற்றும் பாடத்திட்டம் சாத்தியமில்லை. உள்ளூர் வளங்கள், கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான நெகிழ்வுத்தன்மையுடன் ஒரு தேசிய கட்டமைப்பு பாடத்திட்டத்துக்கு அவசியமாகிறது” என சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும், “ஒரு குழந்தைக்கு பள்ளிக்கு வெளியே பரந்துள்ள வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால், வேறுபட்ட பின்னணியை கொண்ட மக்களுக்கு ஒரே பாடத்திட்டம் சாத்தியமில்லை” எனவும் சிபிஎஸ்இ தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் நடைமுறையில் சாத்தியமில்லாதது என சிபிஎஸ்இ நிறுவனமே தெரிவித்துள்ளது.

'ஒரே நாடு-ஒரே கல்வி வாரியம்' கோரி பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு சிபிஎஸ்இ இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in