டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், அமலாக்கத்துறை அனுப்பிய 5 சம்மன்களை ஏன் தவிர்த்தார் என வரும் 17ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை தொடா்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை 5 முறை சம்மன் அனுப்பியது.
கடந்த பிப்ரவரி 2, ஜனவரி 31, ஜனவரி 19, டிசம்பர் 21, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன்களை அனுப்பியது. ஆனால், தனக்கு அனுப்பப்பபட்ட சம்மன்கள் சட்டவிரோதமானவை என்றும், தன்னை கைது செய்ய மத்திய பாஜக அரசின் அழுத்தத்தில் அமலாக்கத் துறை சம்மன்களை அனுப்பி வருவதாகவும் முதல்வர் கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
மேலும், அமலாக்கத் துறை அனுப்பிய அனைத்து சம்மன்களையும் பல்வேறு காரணங்களை கூறி அவர் நிராகரித்தார். இதனால் அதிருப்தி அடைந்த அமலாக்கத் துறை கேஜ்ரிவால் சம்மன்களை நிராகரித்து வருவது குறித்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கேஜ்ரிவால் அமலாக்கத் துறை அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்களை ஏன் நிராகரித்தார் என்பதை வரும் 17ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி உத்தரவிட்டது.
இதையும் வாசிக்கலாமே...
ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?
அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!
ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!
உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்
தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!