திருப்பதியில் குவிந்த பக்தர்கள்... உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருப்பதியில் குவிந்த பக்தர்கள்
திருப்பதியில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு திருப்பதியில் குவிந்த பக்தர்கள் 48 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததில், ஒரே நாளில் 4.5 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புரட்டாசி சனிக்கிழமையான நேற்று திருப்பதியில் பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். 48 மணி நேரம் காத்திருந்து நேற்று ஒரே நாளில் 87,081 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை ஆன நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் இலவச தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் 48 மணி நேரம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையான தரிசிக்கும் நிலை ஏற்பட்டது.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் நாட்களில் இலவச தரிசனத்திற்காக டோக்கன் வாங்கிய பக்தர்களையும், டோக்கன்கள் வாங்காத பக்தர்களையும் கோயிலுக்குள் அனுப்பி கையாளுவதில் இரண்டு வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்றுவதில் பல்வேறு நிர்வாக ரீதியான சிரமங்களை தேவஸ்தான நிர்வாகம் எதிர்கொள்ள நேர்கிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புரட்டாசி மாத சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பதியில் உள்ள கவுன்டர்களில் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று மற்றும் இம்மாதத்தில் 7, 8, 14 ,15 ஆகிய தேதிகளில் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in