'நானும் இந்திய பிரஜை தானே?'... வீல் சேரில் திருமணம் செய்ய வந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த அவமானம்!

கணவருடன், விராலி மோடி
கணவருடன், விராலி மோடி

விராலி மோடி என்ற மாற்றுத்திறனாளி பெண், மும்பை சார் பதிவாளர் அலுவலகத்தில் தன் திருமணத்தின்போது தனக்கு ஏற்பட்ட துயர சம்பவத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

திருமணம் செய்ய சார் பதிவாளர் அலுவலகம் வந்த விராலி மோடி
திருமணம் செய்ய சார் பதிவாளர் அலுவலகம் வந்த விராலி மோடி

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த விராலி மோடி என்ற அந்த மாற்றுத்திறனாளி பெண், திருமண நாளில் மும்பை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு தனது திருமணத்தை பதிவுசெய்யச் சென்றுள்ளார். அங்கு லிப்ட் வசதி இல்லாமல் இருந்துள்ளது.

அவரால் நடக்க இயலாது என்பதாலும், அவர் வீல்-சேர் உதவிகொண்டு செயல்படுபவர் என்பதாலும் இரண்டாம் தளத்தில் செயல்பட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டுள்ளார். அப்போது அங்குள்ள ஊழியர்களின் செயல்கள் அனைத்தும் அவருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் விரிவாக தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், “நான் ஒரு மாற்றுத்திறனாளி பெண். கடந்த 16.10.2023 அன்று மும்பை கார் பகுதியில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் எனக்கு திருமணம் நடைபெற்றது. அந்த அலுவலகத்தில் லிப்ட் இல்லை. அங்கிருந்தவர்களிடம் என் நிலை குறித்து கூறி, கீழே வந்து கையெழுத்து பெற முடியுமா என வினவினேன். கீழே வர முடியாது என்று கூறிவிட்டனர். ‘திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் மேலே வர வேண்டும்’ என்று கூறினார்கள்.

அங்கிருந்த படிகள், செங்குத்தாக இருந்தன. ஏறுவதற்கே சிரமமாக இருந்தது. இருந்தபோதிலும் ஊழியர்கள் யாரும் எனக்கு உதவவில்லை. என் அரசாங்கத்தாலும் குடிமக்களாலும் எனக்கு உதவ முடியவில்லை. இந்நிகழ்வால் நான் மிகவும் மனமுடைந்து இருக்கிறேன். அடுத்தடுத்த அவர்களின் செயல்களால் இரண்டாவது தளத்திலிருந்த அந்த அலுவலகத்துக்கு, என்னை என் வீட்டார் தூக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

மனிதநேயம் மீது நான் வைத்த நம்பிக்கை இந்த செயலால் தற்போது போய்விட்டது. நானும் ஒரு இந்திய பிரஜைதான். எனக்கும் உரிமைகள் இருக்கிறது தானே?

அங்கிருந்த செங்குத்தான பழைய படிக்கட்டுகளில் ஏறும் போது யாராவது அந்த படிக்கட்டுகளின் தவறி விழுந்தால் என்ன செய்வது? என் திருமணநாளில் நானே விழுந்திருந்தால் என்ன செய்வது? யார் வந்து பொறுப்பேற்பார்கள்?” என்று மிகுந்த வருத்தத்துடன் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரின் இந்தப் பதிவு பலரிடையே சோகத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்

10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!

அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in