அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்

கொலை செய்யப்பட்ட பிரதிமா
கொலை செய்யப்பட்ட பிரதிமா

பெங்களூருவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரிகளை மூட உத்தரவிட்ட பெண் அதிகாரியை மர்ம கும்பல் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஷிவமொகா மாவட்டம், தீர்த்தஹள்ளியைச் சேர்ந்தவர் பிரதிமா. இவர், பெங்களூருவில் சுரங்கம் மற்றும் நில ஆய்வியல் துறையின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

பெங்களூரு, தொட்டகல்லசந்திரா என்ற இடத்தில் கோகுலா அடுக்குமாடி குடியிருப்பில், பிரதிமா தனியாக வசித்தார். இவரது கணவரும், மகனும் தீர்த்தஹள்ளி என்ற பகுதியில் வசித்து வருகின்றனர். வழக்கம் போல் நேற்று முன்தினம் காலை பணிக்கு சென்ற பிரதிமா, இரவு 8:30 மணியளவில், அரசு வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். இவரை வீட்டருகில், இறக்கிவிட்டு ஓட்டுநர் சென்றுள்ளார்.

அவர் வருவதற்காகவே காத்திருந்த மர்ம கும்பல், அவருடன் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது. பிரதிமாவின் அண்ணன் பிரதீஷ், பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர். இவர், இரவு தங்கையை மொபைல் போனில் பலமுறை முயற்சித்தும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 8:30 மணியளவில், தங்கை வீட்டுக்கு அவர் சென்றபோதுதான், பிரதிமா கொலையானது தெரிந்தது.

இந்த கொலை விவகாரம் தொடர்பாக மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. பெங்களூருவின், ஹுனசமாரனஹள்ளி கிராமத்தில், லைசென்ஸ் பெறாமல் சட்டவிரோதமாக கல்குவாரி நடத்துவதாக புகார் வந்தது. அங்கு சென்று ஆய்வு செய்த பிரதிமா, அந்த கல்குவாரியை மூடினார். இது தொடர்பாக, அரசுக்கும் அறிக்கை அளித்திருந்தார். இதுவே, அவரது கொலைக்கு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் சித்தராமையா உறுதி அளித்துள்ளார். பெங்களுரூவில் பெண் அதிகாரி கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!

தீபாவளி கொண்டாட்டம்... 16,895 பேருந்துகள் இயக்கம்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? முழு விபரம்!

அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்

பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in