பள்ளி மாணவர் மத்தியில் மோதல்... கத்தியால் வெட்டியவர்களால் பதற்றம்!

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கத்தியுடன் மோதிக்கொண்ட பள்ளி மாணவர்களால் அங்கே பதற்றம் எழுந்துள்ளது.

சாலவாக்கம் அருகே தண்டலத்தில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவரின் 17 வயது மகன், ஒரக்காடு பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் தண்டலத்திலிருந்து ஒரக்காடு பள்ளிக்கு தினமும் சைக்கிளில் சென்று வருவது வழக்கம். நேற்று மாலையும் காலாண்டு தேர்வு முடிந்த உற்சாகத்தில் சக மாணவர்களுடன் சைக்கிளில் தண்டலம் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த இருவர், பிளஸ் 2 மாணவரை வழிமறித்து தாக்கினார்கள். கைவசம் வைத்திருந்த கத்தியால் பள்ளி மாணவரின் தலை மற்றும் உடலில் வெட்டிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். உடன் வந்த மாணவர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்போர் உதவியால், கத்திவெட்டு காரணமாக காயமடைந்த பிளஸ் 2 மாணவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கத்தி கொண்டு தாக்குதல்
கத்தி கொண்டு தாக்குதல்

இந்த சம்பவத்தில் பிளஸ் 2 மாணவர் படுகாயமடைந்ததோடு, தடுக்க முயன்ற சக மாணவர் ஒருவரும் கத்திவெட்டு காயத்தால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருவரிடமும் சாலவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில் வெட்டுப்பட்ட தண்டலம் பிளஸ் 2 மாணவருக்கும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இன்னொரு மாணவருக்கும் இடையே எழுந்த முன்பகையே புதிய மோதலுக்கு காரணம் என தெரியவந்தது. பத்தாம் வகுப்பு மாணவனின் அண்ணன் செங்கப்பட்டு பள்ளியொன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார். தம்பிக்காக அவர் தண்டலம் பிளஸ் 2 மாணவரை தட்டிக்கேட்க முனைந்ததில், கத்திவெட்டு வரை முற்றியிருக்கிறது.

இதனையடுத்து இருதரப்பு மாணவர்களுக்கும் ஆதரவாக வேறுசிலரும் திரண்டதில் அப்பகுதியில் பதற்றம் எழவே, அனைவரையும் போலீஸார் அழைத்து எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in