அரசுப் பள்ளி வளாகத்தில் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் அதிர்ச்சி!

மாணவன் மாரிமுத்து
மாணவன் மாரிமுத்து

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். கூலித் தொழிலாளியான இவருக்கு மாரிமுத்து(14) என்ற மகன் இருந்தார். இவர் அருகே உள்ள பெருங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை அப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் பங்கேற்று விட்டு வீட்டுக்குச் செல்வதற்காகப் பள்ளியின் மேல்மாடியில் உள்ள வகுப்பறைக்கு மாணவன் சென்றார். சிறிது நேரத்தில் பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்குவதற்காக ஓடிவந்த போது அந்த பள்ளிக் கட்டிடத்தில் உள்ள படிக்கட்டு அருகே மாணவன் மாரிமுத்து மயங்கி விழுந்து உள்ளார்.

மாணவன் மாரிமுத்து
மாணவன் மாரிமுத்து

இதனைப் பார்த்த சக மாணவர்கள் மாரிமுத்துவை எழுப்பியும் அவர் எழவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பயந்து போன மாணவர்கள் உடனடியாக இது குறித்து ஆசிரியர்களுக்கு தகவல் அளித்தனர்.

இதைக்கேட்டு பதற்றத்துடன் ஓடி வந்த ஆசிரியர்கள், மாணவனை உடனடியாக மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு மாரிமுத்துவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் மாரிமுத்துவின் குடும்பத்தினர் மத்தியிலும், சக மாணவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மாணவன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர்கள் போலீஸாரிடம் முறையிட்டனர். இதையடுத்து. பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, அதில் மாணவன் பையை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடி வருவதும். பள்ளி படிக்கட்டு முன்பாக மாணவனுக்கு மயக்கம் ஏற்பட்டு அவன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அதையடுத்து, சக மாணவர்கள் அந்த மாணவனை எழுப்பும் காட்சிகளும் அதில் பதிவாகியிருந்தது. இதனை மாரிமுத்துவின் பெற்றோரிடம் காட்டிய பிறகு அவர்கள் சமாதானம் அடைந்தனர். தற்போது மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்துத் தொடர்ந்து போலீஸாரும் கல்வித் துறை அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே…

உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!

மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in