கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!

சில்லறையைச் சுமந்து சென்ற கவுன்சிலர் ரஞ்சித்
சில்லறையைச் சுமந்து சென்ற கவுன்சிலர் ரஞ்சித்

ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் தொடர்ந்து மின்சாரத்தடை ஏற்பட்ட நிலையில் மின்வாரிய ஊழியர்களை்ப பழிவாங்க மின் கட்டணத்தை சில்லறைக் காசுகளாக மாற்றிச் சென்ற கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது. 

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் தலவூர் கிராமத்தில் ஒரு நாளைக்கு 20-க்கும் மேற்பட்ட முறை  மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். பலமுறை புகார் செய்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. இது தவிர சமீபத்தில் கேரளாவில் மின் கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டது. 

ஏற்கெனவே அடிக்கடி ஏற்படும் மின்தடையால் நொந்து போயிருந்த இந்த கிராம மக்களுக்கு மின்கட்டண உயர்வும் ஒரு பேரிடியாக அமைந்தது. இந்த சமயத்தில்தான் மின்வாரிய ஊழியர்களுக்கு பாடம் புகட்ட இந்த கிராம பஞ்சாயத்தின் வார்டு கவுன்சிலரான ரஞ்சித்துக்கு ஒரு யோசனை உதித்தது.

தன்னுடைய வார்டைச் சேர்ந்த 9 வீட்டினருக்கான மின்கட்டணத்தை சில்லறையாக கொடுத்து மின்வாரிய ஊழியர்களைப் பழிவாங்க அவர் ஒரு திட்டம் தீட்டினார். இதன்படி 9 வீட்டினரின் மின்கட்டணத்திற்கான பணத்தை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட ரஞ்சித், அந்த  ரூ.7 ஆயிரத்தையும்  அங்குள்ள ஒரு கோயிலில் கொடுத்து ரூ.5, ரூ.2, ரூ.1 என சில்லறையாக மாற்றினார். பின்னர் அவற்றை ஒரு சாக்கில் கட்டி நேராக அங்குள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று கொடுத்தார். 

7 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறையாக கொண்டு வந்ததைப் பார்த்த அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். வார்டு கவுன்சிலர் என்பதால் அதை வாங்காமல் இருக்கவும் முடியாது. வேறு வழியின்றி அந்த அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து பல மணிநேரம் அந்த சில்லறையை எண்ணி சரி பார்த்து அதற்கான ரசீதையும் கொடுத்தனர்.

மின் மீட்டர்
மின் மீட்டர்

இதுகுறித்து கவுன்சிலர் ரஞ்சித் கூறுகையில், "இதன் பிறகும் இந்த நிலை தொடர்ந்தால் என்னுடைய வார்டில் உள்ள 450 வீடுகளுக்கான மின் கட்டணத்தையும் இதே போல சில்லறையாக கொண்டு போய்க் கொடுப்பேன்" என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in