நாகையில் அதிர்ச்சி சம்பவம்... ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த நபர் உயிருக்குப் போராட்டம்!

நாகையில் சேகர் என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி
நாகையில் சேகர் என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி

இன்று காலையில், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் திடீரென தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த நபர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசு அதிகாரிகள் தேர்தல் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கூடுதல் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

உடல் கருகி உயிருக்கு போராடிய சேகர், மருத்துவமனையில் அனுமதி
உடல் கருகி உயிருக்கு போராடிய சேகர், மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில், இன்று காலையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த நபர் ஒருவர் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் தீயை அணைத்து அந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தலைஞாயிறு அடுத்த வாட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பது தெரியவந்தது. சேகரின் மகள் கடந்த ஓராண்டுக்கு முன் உயிரிழந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவியும் உயிரிழந்துள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த சேகர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சேகர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவி, குழந்தை இறந்த துக்கத்தில் அவர் தற்கொலைக்கு முயன்றாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா, என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   


இன்று ஆண்டின் முதல் சூரிய கிரகணம்... என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?

டக்கென காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசனின் மகன்... ஜெர்க்கான அமைச்சர் பெரியசாமி!

மு.க.ஸ்டாலின் இதைச் செய்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை... ஒரு சவரன் ரூ.53,280!

பாஜகவில் போட்டியிடும் 417 வேட்பாளர்களில் 116 பேர் மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்கள்... அதிர்ச்சி தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in