மகாராஷ்டிரா மாநிலத்தில் மின் கட்டண பில் தொடர்பான தகராறில், மின் வாரிய பெண் ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிஜித் போட் (33). இவர், வழக்கமாக செலுத்தும் மின் கட்டணத்திலிருந்து கூடுதல் கட்டணமாக ரூ. 570-க்கு பில் வந்ததாம்.
தனக்கு மின் கட்டணம் கூடுதலாக வந்திருப்பது குறித்து அபிஜித் போட், பாரமதி தாலுகா, மோர்கான் பகுதியில் மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் லிமிடெட் (எம்எஸ்இடிசிஎல்) அலுவலகத்தில் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார்.
ஆனால், அவரது புகாரின்பேரில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த அபிஜித் போட், கடந்த புதன்கிழமை அன்று சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் ஊழியரான ரிங்கு திட் (26) என்பவருக்கும், அபிஜித் போட்டுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அபிஜித் போட், ரிங்கு திட்டுவை கூர்மையான ஆயுதத்தை கொண்டு தாக்கினார். இதில் படுகாயமடைந்த ரிங்கு திட்டை, சக ஊழியர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரிங்கு திட்டு, 10 நாள் விடுமுறையில் இருந்துவிட்டு, சம்பவம் நடந்த நாள் அன்றுதான் பணிக்கு திரும்பியுள்ளார். இச்சூழலில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, ரிங்கு திட்டுவை கொலை செய்த அபிஜித் போட்டை புனே போலீஸார் கைது செய்தனர்.
கூடுதல் மின் கட்டண விவகாரத்தில் மின் வாரிய ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து
கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?
13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!
பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!