எஸ்பிஐ வங்கியில் ரூ.20 லட்சம் கொள்ளை... துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் அட்டகாசம்!

எஸ்பிஐ வங்கியில் இருந்து ரூ.20 லட்சம் கொள்ளை
எஸ்பிஐ வங்கியில் இருந்து ரூ.20 லட்சம் கொள்ளை
Updated on
2 min read

மணிப்பூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை ஒன்றுக்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மெய்தி மற்றும் குக்கி இனக்குழுக்களுக்கு இடையே பயங்கர வன்முறை வெடித்தது. மாநிலம் முழுவதும் இந்த வன்முறை பரவிய நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பலர் மாயமகி இருக்கும் நிலையில் ஏராளமான பொருட்சேதமும ஏற்பட்டுள்ளது. ஏராளமான பெண்கள் இரு தரப்பிலும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது.

துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் கைவரிசை
துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் கைவரிசை

இந்நிலையில் சமீபத்தில் அங்கு இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போதும் அடுத்தடுத்து துப்பாக்கி ஏந்திய நபர்களின் தாக்குதல் காரணமாக பெரும் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தின் சுரசந்த்பூர் பகுதியில் எஸ்பிஐ வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று மதியம் 2 மணி அளவில் இங்கே பணியாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏராளமான வாடிக்கையாளர்களும் வங்கியினுள் இருந்த நிலையில், திடீரென துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்ம நபர்கள் வங்கிக்குள் கூரையை நோக்கி சுட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

தொடர்ந்து வங்கியில் இருந்த ஊழியர்களை மிரட்டி, பணத்தை கொள்ளை அடித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு சுமார் 20 லட்சம் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணையை துவக்கி உள்ளனர். மணிப்பூரில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் நேஷனல் வங்கியில் 18 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றில் 2 கோடி ரூபாய் அளவிற்கு பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in