நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை பார்க்கா மதன்
நடிகை பார்க்கா மதன்

பாலிவுட் நடிகை பார்க்கா மதன் நடிப்பை விடுத்து புத்த மதத்தைத் தழுவி உள்ளார். தற்போது வெளியாகி இருக்கும் இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை பார்க்கா மதன்
நடிகை பார்க்கா மதன்

பாலிவுட்டில் தொண்ணூறுகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பார்க்கா மதன். 1996ம் ஆண்டு வெளியான ’கிலாடியோன் கா கிலாடி’ என்ற நடிகர் அக்‌ஷய்குமார் படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார் பார்க்கா மதன். முதல் படமே மிகப்பெரிய வெற்றியாக அவருக்கு அமைந்தாலும் அடுத்த ஆறு வருடங்களில் பாலிவுட் அவருக்கு பெரிதாகக் கைக்கொடுக்கவில்லை.

அதன் பிறகு, இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் அவர் நடித்த ’பூட்’ திரைப்படம் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. படங்கள் மட்டுமல்லாது 1857 கிராந்தி, கர் ஏக் சப்னா, சாத் பெரே - சலோனி கா சஃபர் மற்றும் நியாய் போன்ற டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று உள்ளார்.

 பார்க்கா மதன்
பார்க்கா மதன்

நடிப்புத் துறைக்குள் வருவதற்கு முன்பு பல வருடங்கள் மாடலிங் துறையில் இருந்தார் பார்க்கா மதன். அப்போது 1994ம் ஆண்டு நடைபெற்ற ’மிஸ் இந்தியா’ போட்டியில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷ்மிதா சென் ஆகியோருடன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுஷ்மிதா சென் வெற்றி பெற்றார். கடந்த 2012ம் ஆண்டு இவர் நடிப்பை விட்டு விலகுவதாகவும் புத்தமதத்தைத் தழுவப் போவதாகவும் அறிவித்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லாமா ஜோபா ரின்போச்சியின் கீழ், பர்கா மதன் கர்நாடகாவில் உள்ள செரா ஜெய் மடாலயத்தின் ஹர்டாங் காங்செனில் புத்த துறவியாக ஆனார் மற்றும் அவரது பெயரை வென் கைல்டென் சம்டென் (Gyalten Samten) எனவும் மாற்றினார். சிறுவயதில் இருந்தே புத்த மதம் மீது ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார் பார்க்கா மதன். நடிப்புத் துறைக்குள் வந்த பிறகு அவர் தலாய்லாமாவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு நடிப்பைக் கைவிட்டு புத்த மதத்திற்குள் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in