தனது வருங்கால மனைவி வரலட்சுமிக்கு அவரது கணவர் நிக்கோலய் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கிஃப்ட் கொடுத்து அசத்தியுள்ளார்.
சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிக்கோலய்க்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதையடுத்து கணவருடன் அவுட்டிங், டேட்டிங் என ஜாலியாக நேரம் செலவழித்து வருகிறார் வரலட்சுமி. நிக்கோலய் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 15 வயதில் ஒரு மகளும் உள்ளார். இதுகுறித்தான விமர்சனம் இணையத்தில் எழுந்தபோது அதற்கு வரலட்சுமி பதில் கொடுத்தார்.
நிக்கோலயை பல வருடங்களாகத் தனக்கு தெரியும் எனவும் தன் குடும்பத்தின் அனுமதியோடுதான் தன்னிடம் அவர் காதலை சொன்னார் எனவும் கூறினார் வரலட்சுமி. மேலும், அவருடைய முதல் மனைவியும் தனக்கு நன்றாகத் தெரியும் எனவும் சொன்னார்.
இப்படியான சூழ்நிலையில்தான் நடிகை வரலட்சுமிக்கு அவரது வருங்கால கணவர் நிக்கோலய் மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இருவரின் பெயரும் வீட்டின் முன்னால் பொறிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு முன்பே கோடிக்கணக்கில் மதிப்புள்ள வீட்டை தனது காதல் மனைவிக்கு பரிசளித்துள்ளார் நிக்கோலய்.
இதைப்பார்த்த பலரும் வரலட்சுமிக்கு தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். இருவரும் எப்போது திருமணம் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?
நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!
காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!
கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!