எங்கள் குழந்தைகளின் பிறந்தநாள்... வருங்கால கணவருடன் சேர்ந்து செல்லப்பிராணிக்கு கேக்வெட்டிய வரலட்சுமி!
நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது செல்லப் பிராணிகளின் பிறந்தநாளை வருங்கால கணவருடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார். செல்லப்பிராணிகள் இரண்டும் தங்களுடைய குழந்தைகள் என்றும் சொல்லி உருகி இருக்கிறார்.
பெரும்பாலான பிரபலங்கள் தங்கள் செல்லப்பிராணிகளின் கியூட்டானத் தருணங்களை இணையத்தில் பகிர தவறுவதில்லை. அப்படி தனது செல்லப்பிராணிகள் மீது அலாதியான பிரியம் கொண்டவர் நடிகை வரலட்சுமி. சாரா, குசி என பெயரிடப்பட்ட தனது செல்ல நாய்க்குட்டிகளின் பிறந்தநாளை வருங்கால கணவர் நிக்கோலயுடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார்.
இந்த கியூட்டான புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘எங்களுடைய குழந்தைகளின் பிறந்தநாள் இது! என்னுடைய இரு கண்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள். குசிக்கு மூன்று வயது, சாராவுக்கு ஒரு வயது. நீங்கள் இல்லாமல் என் வாழ்க்கையை கற்பனைகூட செய்ய முடியவில்லை. இப்படிக்கு அன்புடன் அம்மா, நிக்’ என உருகியுள்ளார் வரலட்சுமி.
கடந்த வாரத்தில் நிக்கோலயுடன் தாய்லாந்து ட்ரிப் சென்றார் வரலட்சுமி. இப்போது தனது செல்லப்பிராணிகளின் பிறந்தநாளை வருங்கால கணவருடன் சேர்ந்து ஒன்றாக கொண்டாடியுள்ளார். இதைப் பார்த்துவிட்டுப் பலரும், ’நிச்சயம் முடிந்த பின்பு வரலட்சுமி, வருங்காலக் கணவருடன் லிவ் இன்னில் வாழ ஆரம்பித்து விட்டாரா?’ எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதத்தில் இந்த ஜோடிக்குத் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தாலும் திருமணம் எப்போது என்பது இன்னும் முடிவாகல்லை.
இதையும் வாசிக்கலாமே...
இன்று ஆண்டின் முதல் சூரிய கிரகணம்... என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?
டக்கென காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசனின் மகன்... ஜெர்க்கான அமைச்சர் பெரியசாமி!
மு.க.ஸ்டாலின் இதைச் செய்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!
புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை... ஒரு சவரன் ரூ.53,280!