திருமணம் முடிந்து இரண்டே மாதத்தில் அம்மாவான நடிகை!

அமலாபால்
அமலாபால்

திருமணமாகி இரண்டு மாதங்களாகும் நிலையில் நடிகை அமலாபால் தான் அம்மாவான செய்தியைத் தெரிவித்துள்ளார்.

'சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அமலாபால் ‘மைனா’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அதன்பிறகு, ‘தலைவா’, ’தெய்வத்திருமகள்’, ‘ராட்சசன்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்தார். இவருக்கும் இயக்குநர் விஜய்க்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது அமலாபாலுக்கு 23 வயது. இந்த நிலையில் தம்பதி இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர்.

இந்த நிலையில், இயக்குநர் விஜய், ஐஸ்வர்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. விவாகரத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட அமலாபால், தயாரிப்பில் கவனம் செலுத்தினார்.

இதுமட்டுமல்லாது இமயமலை, காடுகள் என அதிக பயணம் மேற்கொண்ட அமலா தான் ஒரு நாடோடி வாழ்க்கையை விரும்புவதாகவும் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் வந்துள்ளது எனவும் பேட்டிகளில் தெரிவித்தார். மேலும் தனது 32வது பிறந்த நாளின் ஜெகத் தேசாய் என்பவரோடு காதலை அறிவித்தார். இந்த ஜோடிக்கு நவம்பர் 5-ம் தேதி கேரளாவில் திருமணம் நடந்தது.

இவர்களுக்குத் திருமணம் முடிந்து இரண்டு மாதங்களாகும் நிலையில், அமலாபால்- ஜெகத் ஜோடி தாங்கள் பெற்றோரான செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். 'இனிமேல் நாங்கள் மூன்று பேர்' என கேப்ஷன் பகிர்ந்துள்ளனர். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in